கண்முன்னே இடிக்கப்பட்ட வீடுகள்... கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்

Update: 2024-10-01 10:18 GMT

சிதம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

சிதம்பரம் அருகே சி, தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரமேஸ்வரநல்லூர் ஆலங்குளத்தை ஆக்கிரமித்து கட்டிய ‌67 வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை ஜேசிபி இயந்திரத்துடன் சிறை பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்