1 கி.மீ தூரத்திற்கு லாக் செய்த மழைநீர்.. மிதக்கும் செங்குன்றம்.. தவிக்கும் மக்கள்

Update: 2024-10-16 14:06 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் 28 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. செங்குன்றத்திலிருந்து வடபெரும்பாக்கம் வழியே மாதவரம் செல்லும் சாலையில் தண்ணீர் வெளியேற வழியின்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்