இன்ஸ்டாவில் வந்த 12 வயது மகளின் போட்டோவை பார்த்து பதறிய பெற்றோர்...சென்னை இளைஞர் செய்த பகீர் செயல்

Update: 2024-07-19 08:41 GMT

இன்ஸ்டாவில் வந்த 12 வயது மகளின் போட்டோவை பார்த்து பதறிய பெற்றோர்... சென்னை இளைஞர் செய்த பகீர் செயல்

சென்னையில் 12 வயது சிறுமியுடன் பழகிய இளைஞரை சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால், சிறுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் இளைஞர் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த உசேன் என்ற இளைஞரோடு பழகி வந்ததாக தெரிகிறது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் உசேனை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த உசேன் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்த சிறுமியின் உறவினர்கள், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்