3 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்கள் விற்பனை - சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-10-15 04:42 GMT
  • ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி
  • வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்றது
  • தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார்
  • 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண்,
  • பான் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் சீன
  • இணையதளம் ஒன்றில் கடந்த மாதம் வெளியானது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவரங்களை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி, தங்களுக்கு விற்றதாக, இணையதள ஹேக்கர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்
  • கோரி ஹிமான்ஷு பதக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட முடியுமா என்பது தொடர்பாக வரும் 17ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்