பெங்களூரில் வாங்கி சென்னையில் சேல்ஸ்.. யோகா மாஸ்டருக்கு கைவிலங்கு போட்ட போலீஸ்

Update: 2024-09-30 03:19 GMT

சென்னை, விருகம்பாக்கத்தில், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களை ஆன்-லைன் ஆப் மூலம் விற்பனை செய்த யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனடிப்படையில், தி நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானது , கோவூரை சேர்ந்த யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார் மற்றும் சாலிகிராமத்தை சேர்ந்த சாய் பாலாஜி என்பது தெரிய வந்தது. இருவரிடமிருந்தும் 1.68 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டைமைன் போதை பொருள் மற்றும் 13 போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒரு கிராம் போதைப்பொருளை பெங்களூருவில் இருந்து 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி ஆன்லைன் ஆப் மூலம் விற்று வந்தது தெரியவர, தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்