"விஐபி கூட இவ்வளவு நேரம் வெயிட் பண்ணது இல்ல"-ஸ்தம்பித்த சென்னையின் ஹாட் ஸ்பாட்

Update: 2024-10-22 11:56 GMT

சென்னை பெருங்குடி ரயில்வே சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் வாகனங்கள் நகரவில்லை என வேதனை தெரிவித்த ஓட்டுநர்கள், புகார் அளித்தும் போக்குவரத்து போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்கள். கடந்த 6 மாதகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்