அடுத்தடுத்த ஷாக்..! - முழு வேகத்தில் களமிறங்கிய டீம்... விசாரணையில் பகீர் தகவல் - அதிரும் சென்னை

Update: 2024-06-03 16:33 GMT

மாதவரம் கே.கே.ஆர். கார்டனில் உள்ள மருந்து குடோனில், சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குடோனில் இருந்து பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு 18 உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழு சென்னை முழுவதும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து விற்பனை நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக தாய்ப்பாலை பதப்படுத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்திய அதிகாரிகள், சுமார் 350 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தனர். 50 மில்லி லிட்டர் தாய்ப்பால் 900 முதல் 1300 ரூபாய் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட தாய்ப்பாலை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்