வசூல் வேட்டையாடிய தனியார் பள்ளி.. - கொந்தளித்த பெற்றோர்கள் செய்த சம்பவம்..

Update: 2024-09-24 12:44 GMT

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக்கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் இந்தப் பள்ளியில் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, திடீரென கட்டணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. 1ம் வகுப்புக்கு, 4 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 5ம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 10ம் வகுப்பு கட்டணம், 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பள்ளியை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடவாக்கம் - பரங்கிமலை சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்