வெளிநாட்டில் காதலி செட்டில்?... வேலையில் தொடர்ந்து நைட் ஷிப்ட் - காதலன் எடுத்த விபரீத முடிவு..

Update: 2024-07-20 11:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் நல்லாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். 25 வயதான இவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மாவுக்கட்டு போடும் அறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, ஆகாஷ் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் பணிக்காக அபுதாபிக்கு சென்றநிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் சரிவர பேசாததால் கடந்த சில நாட்களாக ஆகாஷ் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஆகாஷ் தனது காதலியிடம் மீண்டும் செல்போனில் பேசும்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ஆகாஷ் நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் மாவுக்கட்டு போடும் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போன் அழைப்பை ஏற்காததால் ஆகாஷின் காதலி சக ஊழியரை தொடர்பு கொண்டு அந்த அறையை திறந்து பார்க்க கூறி உள்ளார். அறையை உடைத்து பார்த்தபோது ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும்நிலையில், தகவலறிந்து வந்த ஆகாஷின் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்