``உன் பையன் செத்து போய்ட்டானா? இந்தா காச பிடி’’ - காரை மேலே ஏற்றி தெனாவட்டு..பணத்திமிரை அடக்கிய தாய்

Update: 2024-10-21 05:18 GMT

தாயுடன் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது போதை ஆசாமி காரை ஏற்றியதும், அதன் பின் நடந்த சம்பவமும் சென்னை திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்க்கலாம் விரிவாக..

சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில்தான் இந்த விபத்து...

தாயுடன் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது, மது போதையில் காரை தாறுமாறுகாக இயக்கி வந்த போதை ஆசாமி ஒருவர் காரை ஏற்றி மோதி இருக்கிறார்...

கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தால், செய்வதறியாமல் நின்ற சிறுவனின் தாயை பார்த்து, உன் மகன் என்ன இறந்தா விட்டான், உயிருடன் தானே இருக்கிறான் என ஓட்டுநர் கேட்டது அப்பக்கத்தினரை ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது..

இதை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவர் மீது, அந்த போதை ஆசாமி காரை ஏற்ற முயன்றது பரபரப்பை மேலும் கூட்டியது..

சம்பவத்தில், காரை துரத்திச் சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள், மது போதையில் இருந்த நபரை பிடித்து திருவெற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்...

இதனிடையே, தன் மகனை திருவொற்றியூர் எல்லையம்மாள் கோயில் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனின் தாய் அழைத்து சென்ற நிலையில், அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டும் இருந்ததாக கூறி விவகாரம் வேறொரு கோணத்தில் பூதாகரமாக்கியது..

அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியரே சிகிச்சை அளிக்க வந்ததாக கூறப்படுகிறது..

கூடவே, மருத்துவர் இல்லாமல் நீங்கள் எப்படி சிகிச்சை அளிக்கலாம் என சிறுவனின் தாய் கேட்டதாகவும்.. அதற்கு இரவு நேரங்களில் மருத்துவர் இருக்க மாட்டார் ... நான் தான் சிகிச்சை அளிப்பேன்... இஷ்டம்னா பாருங்க இல்லனா வெளியே போங்க என்று செவிலியர் கூறியதாகவும் சொல்லப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது..

போதை ஆசாமியால் நிகழ்த்தப்பட்ட சாலை விபத்தும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்ற இந்த களேபர சம்பவமும் சென்னை, திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

Tags:    

மேலும் செய்திகள்