சென்னையில் நயன்தாரா வசிக்கும் அப்பார்ட்மெண்டில் கொள்ளை

Update: 2024-07-01 14:04 GMT

சென்னை, எம்.ஆர்.சி நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவரிடம், சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், நடத்தை சரியில்லை எனக்கூறி சில நாட்கள் முன்பு சரவணனை கோபாலகிருஷ்ணன் பணியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனிடையே, கோபாலாகிருஷ்ணன் வீட்டில் இருந்து 250 சவரன் தங்க நகை, 10கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் திருடுபோனது கோபாலகிருஷ்ணனை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. விசாரணையில், சரவணன் தலைமறைவானது தெரியவர, அவர் போலீசில் புகாரளித்திருக்கிறார். புகார் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சென்னை அசோக் நகரில் பதுங்கி இருந்த சரவணனை கைது செய்தனர். தொடர்ந்து, சரவணனை போலீசார் துருவி துருவி விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருடு போன குடியிருப்பில் நடிகை நயன்தாரா வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. முக்கிய விஐபிக்கள் அடிக்கடி வந்து செல்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இந்த குடியிருப்பில், பேஸ் டிடெக்டர் இன்றி நுழைய முடியாத சூழலில் திருடுபோயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்