காலையில் சீசிங் ராஜா என்கவுண்டர்.. லிஸ்டில் அடுத்த ரவுடியை தூக்கிய போலீஸ்.. பெரும் பரபரப்பு

Update: 2024-09-23 08:59 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதூர் அப்புவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய யார் நிதி அளித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் புதூர் அப்பு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்