கண்முன்னே 3 உயிர்கள்.. மனைவி, மகள் கோர மரணம்.. அலறி துடித்த கணவன்

Update: 2024-09-09 05:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூரை சேர்ந்த ஜெயவேல், மனைவி, மகன், மகள்களுடன் சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு வாடகை காரில் சென்றனர். இவர்கள் சென்ற கார், அலமாதி பகுதியில் சென்ற போது சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயவேலின் மனைவி உஷாராணி, அவரது 4 வயது மகள் சாய் மோனிஷா மற்றும் வாடகை கார் ஓட்டுனர் அனஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயவேல் மற்றும் 4 வயது மகன் சாய் மோகித் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்