செய்வதையும் செய்துவிட்டு கும்பலாக தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்..தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்

Update: 2024-07-12 10:12 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஒரு இளைஞரை ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

பல்லடம் அருகே டூவீலரை ஓட்டி வந்த இளங்கோ என்பவரை, ஆட்டோ ஒன்று இடிப்பது போல் வந்துள்ளது. இதனால், ஆட்டோ டிரைவருக்கும், இளங்கோவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றுகூடி, இளங்கோவை தாக்கினர். இந்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்