ஆம்ஸ்ட்ராங் கொலையின் அடுத்த அதிர்ச்சி கூட இருந்தே குழி பறித்த துரோகிகள்... ``குழந்தைக்கு குறி''... சிக்கிய யாரும் எதிர்பார்க்காத நபர்..! போலீசாரையே அதிர வைத்த கைது

Update: 2024-08-09 16:10 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் போலீசாரிடம், சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவர் சிக்கி கைதாகி இருக்கிறார். யார் அவர் ?.. பார்க்கலாம் விரிவாக...

ரவுடி ஆற்காடு சுரேஷ் தொடங்கி, சம்போ செந்தில், சீசிங் ராஜா, நாகேந்திரன் என ரவுடிகள் பலரின் நெட்வொர்க்கை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அடுத்தடுத்து டிராக் செய்து வருகின்றனர்...

இது ஒரு புறம் இருக்க, திடீரென ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தப்போவதாக சொல்லியும் வந்த கடிதம் பகீர் கிளப்பி இருந்தது...

உடனே விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்....

விசாரணையில், இளைஞருக்கும் கடிதத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது....

மேலும், தன் பெயரில் ஏற்கனவே இதேபோல் ஒரு மிரட்டல் கடிதம் காவல்துறைக்கு அனுப்ப பட்டிருப்பதாக கூறி இளைஞர் வாக்குமூலம் அளித்திருந்தது வழக்கு விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியது..

இதனையடுத்து இளைஞரின் பின்னணியை விசாரித்த போலீசார், அவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநர் என்பதை கண்டுபிடித்தனர்...

கடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தாளாளர் கைது அதனுடன் மட்டுமில்லாமல், அந்த பள்ளியின் தாளாளரான அருண் ராஜ், ஏற்கனவே மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறை சென்று வந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அருண்ராஜ், தான் தாளாராக இருக்கும் பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான ரோஸ் நிர்மலாவை அனுகியதாகவும், இதில் அருண்ராஜின் விண்ணப்பத்தை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது...

இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் நிர்மலா குறித்து அருண்ராஜ் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டிய நிலையில், பின் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது...

இந்த விவகாரத்தில் தான், அதிகாரி ரோஸ் நிர்மலாவை மேலும் அச்சமடைய செய்யும் வகையிலும், அதே சமயம் போலீசாரிடம் இருந்து தான் தப்பிக்கும் பொருட்டும்.. தன் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சதீஸ் பெயரில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து காவல்துறைக்கு அருண்ராஜ் கடிதமும் அனுப்பியிருக்கிறார்...

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்ராஜ், சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது...

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை இதேபோல் மிரட்டி கைதாகியிருந்த சம்பவம்

மேலும், இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது... இந்நிலையில், இந்த வழக்கில் சதிஷ் சாட்சியமாக சேர்க்கப்பட்டிருப்பதால், அவர் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடும் என நினைத்து, இளைஞரை பழிவாங்க அருண்ராஜ் இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்...

இது தொடர்பாக விசாரிக்க சென்ற போது, அவர் தலைமறைவானது அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்புற செய்தது..

இந்நிலையில், அருண்ராஜை தொடர்ந்து தேடி வந்த போலீசார், தற்போது அவரை கைது செய்திருக்கும் நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்