எங்கும் தண்ணீர்... தொடர் கனமழை.. அம்பத்தூரில் குளம் போல் தேங்கிய மழை நீர்! | Ambattur

Update: 2024-10-15 12:04 GMT

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இடத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதிகளில் இடைவிடாத கொட்டிய கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை அம்பத்தூரில் பாடி, கொரட்டூர், பட்டரைவாக்கம், அம்பத்தூர் தொழில்பேட்டை, அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம், கள்ளிகுப்பம், புதூர், ஒரகடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. அதேபோல் பிரதான சாலைகளான சி.டி.எச் சாலை, கருக்கு பிரதான சாலை, மாதனாங்குப்பம் பிரதான சாலை, ரெட்டில்ஸ் பிரதான சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்