சென்னை ஏர்போர்ட்டை அதிரவைத்த குருவிகள்... கிலோ கணக்கில் கொட்டிய தங்கம்

Update: 2024-08-02 09:11 GMT

துபாய், சிங்கப்பூர், இலங்கையில் இருந்து சென்னை வந்த சென்னை வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 3 விமானங்களில் வந்த, 9 கடத்தல்

பயணிகளை கைது செய்யப்பட்டனர். அவர்களின் உள்ளாடைகள், கைப்பைகள் போன்றவைகளில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்டுகள், மற்றும் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய மூன்று விமானங்களில் வந்த 9 பயணிகளிடம் இருந்து. சுமார் 8 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் 5 கோடியே 60 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்