பொய் கணக்கு மட்டுமே காட்டும் ஒப்பந்ததாரர் - தலைமறைவாக இருந்த பலே கில்லாடி

Update: 2024-01-04 02:12 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2005 இல், வடக்கு கோணத்தில் உள்ள குளத்தை தூர்வாராமல், பொய் கணக்கு காட்டி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஒப்பந்ததாரரான ராஜகோபாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ராஜகோபால் தலைமறைவான நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஆறு மாதங்களாக தேடி வந்தனர். இந்நிலையில், அவரை கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்