வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை; சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன் - மத்திய அரசு அனுமதி

வெங்காய விலையை குறைப்பதற்கும், தாராளமாக மக்களுக்கு கிடைக்க செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-10-24 07:30 GMT
இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெங்காய விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி, வரும் டிசம்பர் 31 வரை அதிகபட்சமாக  மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன்னும், சில்லரை வர்த்தகர்கள் 2 மெட்ரிக் டன்னும், வெங்காயம் கையிருப்பு வைக்க  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும் அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்