"அடுத்தது திமுக ஆட்சி தான் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அடுத்தது திமுக ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-04 03:07 GMT
தமிழகத்தில் அடுத்தது திமுக ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி திமுக இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின்  அதிகார பலத்தையும் மீறி 60 சதவீத இடங்களை கைப்பற்றியதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 90 சதவீதம் இடங்களை கைப்பற்றி இருப்போம் என்றும் அவர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்