"உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் தேசிய மக்கள் பதிவேட்டு முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-28 07:06 GMT
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் தேசிய மக்கள் பதிவேட்டு முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள், அரசியல் காரணங்களுக்காக தற்போது எதிர்ப்பதாகவும் கூறினார். தேசிய மக்கள் பதிவேட்டால்,  யாருக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து பிரதமரின் உரையை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டாயமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சமி விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்