பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ. 2.20 லட்சம் கையாடல் : கையாடல் செய்த வங்கி உதவியாளர் கைது

குன்றத்தூரில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-18 03:40 GMT
சென்னை குன்றத்தூரை அடுத்த கெலடிப்பேட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் அங்குள்ள பிரபல வங்கியில், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சேமிப்பாக வைத்திருந்தார். இந்நிலையில், தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது அதில் சேமித்து வைத்த தொகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கி உதவியாளர் பழனிவேல் என்பவர் அந்த பணத்தை கையாடல் செய்தது, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஈஸ்வரியின் வங்கி கணக்கு எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறுக, சிறுக 2 லட்சத்து 20 ஆயிரத்தை பழனிவேல் எடுத்து கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்