காரைக்கால் : வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

Update: 2019-09-16 11:13 GMT
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர், வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமானை தரிசனம் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்