முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை 43 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் இன்று நண்பகல் 12.55 மணியளவில் முழு கொள்ளளவான 120 அடியை 43வது முறையாக எட்டியது.
அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 73 ஆயிரம் கன அடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவு 65 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெளியேற்றும் அளவும் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கரையோரம் வசிக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.