இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை

இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-09-03 20:30 GMT
இல​ங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கடலுக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், அடுத்த வாரம் விமானம் மூலம் தமிழகம் அனுப்பப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, வரும் ஒன்றாம் தேதி, படகின் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்