பொள்ளாச்சி விவகாரம், தாக்குதல் வழக்கு : மணிவண்ணனுக்கு மேலும் 3 நாள் காவல்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 29 ஆம் தேதி மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மணிவண்ணன் காவல் இன்றுடன் காவல் முடிந்த நிலையில் மேலும் விசாரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.