கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகன் தற்கொலை முயற்சி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்த தாய்-மகன் இருவரும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-02-05 02:12 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்த தாய்-மகன் இருவரும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி, அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில், இருவரும் பண்ருட்டி வட்டம் அன்னங்காரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி அஞ்சலை மற்றும் அவரது மகன் முருகன்  என்பதும், அவர்களது நிலத்தை உறவினர்கள் அபகரித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்