அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - காரில் வந்த இருவர் தப்பியோட்டம்

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே காரில் சென்ற இருவர் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.. பொதுமக்கள் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் அவர்கள் தப்பிச்சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

Update: 2018-12-12 04:34 GMT
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே காரில் சென்ற இருவர் அரசு பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.. பொதுமக்கள் தாக்குவார்களோ என்ற  அச்சத்தில் அவர்கள் தப்பிச்சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர். மதுரை பரவையை சேர்ந்த ராஜேஷ்வரன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் பல்லடம் அருகே இரவில்  காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் மோதியதால் இருவரும் பேருந்து ஓட்டுனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இதனால் பயந்து போன காரில் வந்த இருவரும் தப்பியோடினர். அவர்களை பிடிக்க முடியாததால் போலீசார் காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 2 இளைஞர்களின் உடல்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இரு உடல்களைகளையும் மீட்ட போலீசார், இறந்து போன இருவரும் காரில் வந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.  உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்