"புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம்" - தலைமை செயலாளருக்கு கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்க, அரசு ஊழியர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-11-24 02:07 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்க, அரசு ஊழியர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஒப்புதல் கடிதத்தை, தலைமை செயலாளருக்கு அவர்கள் அனுப்பி உள்ளனர். சென்னையில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்