கம்பீருக்கு கீழ் முதல்முறையாக.. என்ன செய்ய போகிறார்கள் ரோகித், கோலி?

Update: 2024-08-02 04:43 GMT

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று மதியம் நடைபெற உள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா இன்று விளையாட உள்ளது. சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறி வரும் இலங்கை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்