விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... - மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

Update: 2024-07-04 17:29 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றும் காவலர்கள், தபால் வாக்களித்து வருகின்றனர். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட போலீசார், தபால் ஓட்டு போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆகியோர் இணைந்து, தபால் ஓட்டுப்பதிவை நேரில் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்