உதயநிதி குறித்து பிரஸ் மீட்டில் எழுந்த கேள்வி - உடனே துரைமுருகன் செய்த செயலால் பரபரப்பு

Update: 2024-09-21 13:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதமடைந்துள்ளது. அதனை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தின் நீர்த்தேவை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இறுதியாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல், அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்