குற்ற உணர்வில் திரும்பி சென்றாரா திருமா? - பகிரங்க மன்னிப்பு கோரும் அளவுக்கு என்ன பேசினார்?

Update: 2024-10-05 07:35 GMT

இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருந்து தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்தவர் தமிழைசை சௌந்தரராஜன் என பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் என்ற காரணத்தினாலேயே தமிழிசை செளந்தரராஜனை, விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததாக தெரிவித்தா​ர். தமிழக பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்