"சிக்னல் கொடுத்த பாஜக கூட்டணி கட்சிகள்" "எப்போது வேண்டும் என்றாலும் கவிழும்"-ராகுல் பரபரப்பு பேட்டி

Update: 2024-06-18 11:34 GMT

தேர்தலுக்கு பின்பு முதல் முறையாக சர்வதேச ஊடகத்திற்கு ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமர் மோடி தலைமையிலான 3வது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க போராடும் என கூறியுள்ளார். மக்களவையில் எம்.பி.க்கள் பலத்தை குறிப்பிட்டு, இந்த சூழலில் கூட்டணி அரசு உடையக்கூடியது என குறிப்பிட்டிருக்கும் ராகுல் காந்தி, சின்ன பிரச்சினை கூட அரசை கவிழ்த்துவிடும், ஒரு கூட்டணி கட்சியாவது வேறு திசைக்கு மாறலாம் என கூறியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்தவர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கும் ராகுல் காந்தி, மோடியின் முகாமுக்குள்ளும் பெரும் அதிருப்தி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். வெறுப்பையும், கோபத்தையும் பரப்பலாம், அதனால் பயன் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துவிட்டனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்