``மேலே கை வைத்த அந்த 2 முன்னாள் அமைச்சர்களை விடவே மாட்டோம்’’ - அமைச்சர் உறுதி

Update: 2024-10-17 16:53 GMT

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெகன். ஆறுமுகநேரி மடத்துவிளையில் சிஎஸ்ஐ ஆலய போதகராக பணியாற்றி வருகிறார். இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் உறவினரை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள... அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர், ஜெகனின் கார் பின்னே தங்களின் கார்களில் வந்ததாக தெரிகிறது. இதில், இருவரது ஆதரவாளர்களும் தங்களின் கார் முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பியதாகவும், ஆனால் ஜெகன் விடவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், முத்தையாபுரம் உப்பாத்து ஓடை அருகே, ஜெகனின் காரை வழிமறித்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜெகனை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. காயமடைந்த ஜெகன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்தித்து ஆறுதல் கூறிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்