``செல்போன ஆப் பண்ணவே கூடாது'' - அமைச்சர் செந்தில்பாலாஜி கடைசி வார்னிங்

Update: 2024-10-09 03:35 GMT

மழைக்காலங்களில் அரசு அலுவலர்கள் தமது அலைபேசியை எந்த காரணம் கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்களை, ஒரு மீட்டர் உயரத்தில் நிறுவும் பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மரம் வெட்டும் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்