நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Update: 2024-10-05 10:28 GMT

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர குறைதீர் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற அவர், மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்