“நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் மோடி“ - புயலை கிளப்பிய ராகுல்

Update: 2024-04-09 06:14 GMT

சாமானியர்களுக்கு அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சில கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, இவ்வளவு பணத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை 24 ஆண்டுகள் நடத்தி இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸின் திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கேட்பவர்கள், இந்த புள்ளிவிவரங்களை மறைக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை நண்பர்களிடம் மோடி காட்டிய கருணை போதும் என்ன தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சாமானியர்களுக்கு அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்