சவாலில் வென்ற தினமே ராகுலிடம் தெரிந்த மாற்றம்

Update: 2024-06-26 12:55 GMT

நாடாளுமன்ற சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி உரையாற்றினார். சபாநாயகர் தனது பணியை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க விரும்புவதாக குறிபிட்ட ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசிடம் அரசியல் அதிகாரம் வேண்டும் என்றால் இருக்கலாம் என்ற ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் குரலை அடக்கி சபையை திறம்பட நடத்தலாம் என்ற எண்ணம் ஜனநாயத்திற்கு புறமானது என்றார். இந்திய அரசியலமைப்பை காப்பதற்கு எதிர்க்கட்சிகள் தேவை என்ற மக்கள் விருப்பத்தை தேர்தல் பரைசாற்றியிருக்கிறது என்ற ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம் உங்கள் கடமையை நீங்கள் செய்வீர்கள் என சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்