எதிர்க்கட்சிகள் வெளியே எழுந்து போகும் போது மோடி சொன்ன வார்த்தை

Update: 2024-07-03 13:20 GMT

மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதற்கு மத்தியில், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினர் செயலை விமர்சித்த அவை தலைவர் ஜெகதீப் தன்கர், பேச வாய்ப்பளிப்பதாக சொல்லியும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள், அவர்கள் என்னையோ, உங்களையோ அவமதிக்கவில்லை, அவர்கள் உறுதிமொழி ஏற்ற அரசியலமைப்பைதான் அவமதித்திருக்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தோல்வியை ஏற்க முடியவில்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தோற்கடிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் இப்போது கூச்சலிட்டுக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்