``இதுபோன்ற அறிவிப்புகள் நிலைநாட்டும்'' - தமிழக அரசு பாராட்டு

Update: 2024-07-03 10:31 GMT

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் நிலைநாட்டி உள்ளதாக, தமிழக அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதேபோல் திருச்சியில் கலைஞர் பெயரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும்,

6746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1149 கோடி ரூபாய் செலவில் மறு கட்டுமானம் செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது.

இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளதாகவும், என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதை சொல்லிலும் செயலிலும் நிலைநாட்டி உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலினை, தமிழக அரசு பாராட்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்