தமிழகமே பரபரப்பாக பேசிய முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை மரணம்.. கார் ஓட்டுநருக்கு அதிர்ச்சி தீர்ப்பு

Update: 2024-10-02 04:07 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில், ஓட்டுனர்கள் 2 பேருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் மாவட்ட தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மரியம்பிச்சை உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் ஆனந்தனுக்கு ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனையும், கன்டெய்னர் லாரி ஓட்டுனர் நியமித்துல்லாவிற்கு, ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனையும், விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்