ஆளுநரிடம் சொன்னதும் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை.. உற்சாக வரவேற்பு அளித்த ஜவ்வாதுமலை மக்கள்

Update: 2024-09-07 09:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த ஜவ்வாதுமலையில் உள்ள விளாங்குப்பம் கிராமத்தில், பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பழங்குடி மக்கள் சிறப்பான வரவேற்பை தந்தனர். இளநீர், மலைத்தேன் உள்ளிட்டவற்றை ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பழங்குடி மக்கள் பரிசாக அளித்தனர். பழங்குடி மக்கள் மத்தயில் பேசிய ஆளுநர், அவர்கள் தயாரித்த உணவை சுவைத்து மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்