அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட ஓபிஎஸ்.. ஈபிஎஸ்ஸே எதிர்பாரா சுவாரஸ்ய ட்விஸ்ட்

Update: 2024-07-08 07:37 GMT

அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சுயநலத்திற்காக பல துரோகங்களை ஈபிஎஸ் செய்து வருவதாகவும், தனது விசுவாசத்தைப் பற்றி ஈபிஎஸ் அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஈபிஎஸ்ஸிடம் எந்த பதவியையும் கேட்கவில்லை என்றும், இனியும் கேட்கமாட்டேன் என்றும் கூறியுள்ள ஓபிஎஸ்,,

துணை முதல்வர் பதவியை முதலில் வேண்டாம் எனக் கூறியதாகவும், பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் அப்போது ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ், கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த ஏன் ஈபிஎஸ் தயங்குகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியில் சேர்க்குமாறு தான் கோரிக்கை வைக்காத நிலையில், தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என ஈபிஎஸ் கூறுவது கேலிக்கூத்தாக இருப்பதாகவும்,

ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவதாகவும், ஈபிஎஸ் தாமாக பதவி விலகாவிட்டால், தொண்டர்கள் அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்