கொடூர தாக்குதல்.. வீல்சேரில் பார்த்ததும் ஈபிஎஸ்க்கு வந்த கடுங்கோபம்

Update: 2024-10-10 04:00 GMT

அதிமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை மற்றும் மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் தாக்கப்பட்டதாகவும், காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் அதிமுகவினர் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்