பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு

Update: 2024-08-27 12:28 GMT

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்ஷிராம் மறைவுக்கு பிறகு கடந்த 2003ஆம் ஆண்டு முதல், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொறுப்பை மாயாவதி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்