"ஒரு மணி நேரம்" - கண்சிவக்க எச்.ராஜாவுக்கு சவால் விட்ட செல்வபெருந்தகை

Update: 2024-09-18 04:54 GMT

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தன்னுடன் ஒரு மணி நேரம் விவாதிக்க தயாரா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார். ராகுல் காந்தியை விமர்சனம் செய்த எச்.ராஜாவை கண்டித்து, சென்னை எம்.கே.பி.நகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எச் ராஜாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய காங்கிரசார், அவரது உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, தொடர்ந்து ராகுல்காந்தியை விமர்சனம் செய்தால், பாஜகவினர் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்