"திமுக எம்.பி.க்களை நம்பி..." - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Update: 2024-09-23 15:15 GMT

தி.மு.க. எம்.பி.க்களை நம்பி தமிழக மீனவர்கள் வாழ்விழந்து நிற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பூம்புகார் மீனவரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை கண்டித்து மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுவதாக தெரிவித்துள்ளார். நாணய வெளியீடு, கார் பந்தயம், பேனா சிலை ஆகியவற்றுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றவர், தமிழக மீனவர் பிரச்சினையில் மட்டும் கடிதத்துடன் நிறுத்திக் கொள்வதாகவும், தி.மு.க. எம்.பி.க்களை நம்பி தமிழக மீனவர்கள் வாழ்விழந்து நிற்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்