"விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழகம் நிலம் வழங்க வேண்டும்" - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-03-27 14:32 GMT
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்கியது. இதனிடையே, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பயணிகள் வந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, தமிழகத்தை ஒட்டி புதுச்சேரி அமைந்துள்ளதால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்