"தயவு செய்து தமிழ்ப் பெயரை சூட்டுங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

புதுவை ஔவையார் விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ் பெயரை பிள்ளைகளுக்கு வைப்பது தற்போது அரிதாகிவிட்டதாக" கருத்து தெரிவித்தார்.

Update: 2022-03-06 09:08 GMT
புதுவை ஔவையார் விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ் பெயரை பிள்ளைகளுக்கு வைப்பது தற்போது அரிதாகிவிட்டதாக" கருத்து தெரிவித்தார். கடற்கரை சலையில் உள்ள காந்தி திடலில் ஔவையார் விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்த நிலையில், விழாவில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வைப்பதாகக் குற்றம் சாட்டியதுடன், தமிழைப் படித்தால் தான் உயர்வு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்